'மந்திரம்' நூல்அறிமுகம்
'மந்திரம்' நூல்அறிமுகம் பதிப்புரை: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். என்பதை இந்த நூலின் அடிப்படையாக்கியுள்ளார் நூலாசிரியர். ஆக- இந்த நூலின் நோக்கம் உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது. அதை இந்த நூல் சிறப்பாகச் செய்யும் என்று உறுதியளிப்பதற்கானதே இந்தப் பதிப்புரை. 'குற்றம் காண்கில் சுற்றம் இல்லை' என்பது, பேரளவினர் அறிந்த, ஒளவையார் பங்களித்த ஒரு பழமொழி. சுற்றத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியதும், நாம் உறுதியாகக் களைய வேண்டியதும் ஆன, குற்றம் என்கிற தலைப்பிற்கு எதிர்த் தலைப்பு மாண்பு. உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது என்கிற இந்தநூலின், இந்தக்கரு, நூலாசிரியர் எண்ணத்தில் தோன்றிய போதே அது கடவுளில் பதிவாகிவிட்டது. இந்த நூலை எழுதிமுடிக்க நூலாசிரியருக்குப் பயன்பட்ட, தமிழின் உயிர் பனிரெண்டு, மெய் பதினெட்டு என்கிற முப்பது எழுத்துக்களும், அந்த முப்பது முதலெழுத்துக்கள் உருவாக்கும் 246 உயிர்மெய் எழுத்து...