என்தலைவி, எனக்குக் கிடைத்த உயிர்மையும் கடவுள்பேறும் ஆவாள்! இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற புரிதல் வரிசையில்
இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, ' இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை ' என்கிற கண்டுபிடிப்பின் தலைப்பை, என் புலமை ஆதாயமாக (அறிவுசார் சொத்துரிமை) தொடர்ந்து பதிவிட்டு வரும் வரிசையில், நான் உருவாக்கிய கட்டுரையே, என் தலைவி எனக்குக் கிடைத்த முதன்மையான கடவுள்பேறு! என்கிற இந்தக் கட்டுரை ஆகும். ஐம்பொழுது: 1.கிழமை: வெள்ளிக்கிழமை 2.நாள்: 12 3.மாதம்: ஆனி 4.தமிழ்த்தொடராண்டு: 5128 5.தமிழ்த்தொடர்நாள்: 1872752 1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவிய, இருமைக் கோட்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள்: மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேய இந்தியாவில் வாழ்ந்திருந்த அத்தனைத் தமிழர்களும் ஆகிய தமிழ்முன்னோர்கள். 2. வெளி என்கிற இடத்தின் அடிப்படை இயல்பு: இயக்கமின்மை. அதற்கு அ.வெளி ஆ.விண்வெளி இ.விசும்பு என்கிற மூன்று நிலைகள் உண்டு. 3. காலம் என்கிற பேரளவான தனி ஒன்றுகளுக்கு எண்ணிக்கை உண்டு. தான்தோன்றி இயக்கம் உண்டு. வளர்ச்சியும் உண்டு. 4. தனி ஒன்றுகளின் அடுத்த கட்ட வளர்ச்ச...