யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை!
யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை என்பதைத் தமிழ்முன்னோர், ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில், தௌிவாக நிறுவியுள்ளனர். இதை நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும், புரிந்து கொண்டு, உங்கள் எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு கடவுளிடம் நிறைய நிறையக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்கானது ஐந்திணைக்கோயில். கடவுளே! விசும்பு தெய்வமே! என்று விளித்து, அன்றாடம், உங்கள் சின்னத்சின்னத் தேவைகளைத், தெளிவாக உறுதியாக, கேளுங்கள். கடவுள் ஒவ்வொன்றாக நீங்கள் கேட்ட அத்தனையையும் நிறைவேற்றித்தருவதைப் பார்த்து வியந்துபோவீர்கள். உங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றுக்கும், கடவுளே! விசும்பு தெய்வமே! என்னுடைய இந்தக் கேட்பை நிறைவேற்றித் தந்தமைக்கு நன்றி! என்று, கடவுள் உங்களுக்காக முன்னெடுத்த முயக்கத்தைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்களால், கடவுளில் உங்களுக்கான சொந்த இடம், விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் உங்களின் பெரிய பெரிய தேவைகளை எல்லாம், கடவுளிடம் கேட்டுப்பெறுவது மிகமிக எளிதாகிவிடும். உங்களுக்கு மட்டுமேயான, உங்கள் சொந்தக் கடவுளைக், கட்டமைத்துக்கொள்ள, விரிவாகக் கற்றுத்தரும் ந...