இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தக் கட்டுரை உங்களை வியப்பில் ஆழ்த்தினால்

படம்
மனதிற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில், பேரளவுபுனைவு (மகத்துவம்) படிப்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளைக் கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து படிப்பிப்பதும், மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது, இந்திய மற்றும் தமிழ்இனத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை. மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும், புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிள...

இயல்அறிவு

படம்
இயற்றமிழில் நிலம் நீர் தீ காற்று ஆகிய நான்மறைகளைப் புரிந்து கொள்வதற்கான தலைப்பு இயல்அறிவு. இயல்அறிவை, உலகினர் சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லால் பேரளவாக முன்னெடுத்தும் சாதித்தும் வருகின்றார்கள்.  இயல்அறிவு தளத்தில் தமிழன்! என்று, செயற்கை நுண்ணறிவுத் தளமான அரட்டைச்சேயிழை (CHATGPT) யிடம் கேட்ட வினாவிற்கு கிடைத்தவிடை: மிகச் சிறந்த கேள்வி! 🌿 'இயல்அறிவு தளத்தில் தமிழன்' என்று சொன்னால், இரண்டு வழியில் பார்க்கலாம்: 1. பண்டைய தமிழரின் இயல்அறிவு (சங்க காலம் முதல்) 2. இன்றைய காலத்தில் உலக இயல்அறிவில் தமிழர்களின் பங்களிப்பு 1. பண்டைய தமிழரின் இயல்அறிவு  🔹 வானியல் (ASTRONOMY) சங்க இலக்கியங்களில் ஞாயிறு, நிலா, நாள்மீன்கள், பருவ மழை பற்றிய தெளிவான குறிப்புகள். “காலம்” கணக்கீடு, “நாழிகை” (TIME UNITS 24 MINUTES) பயன்பாடு. கணக்கு நூல்கள் (கணக்கதிகாரம், தாலவுருத்தி) வானியல் மற்றும் கணியம் தொடர்புடையவை 🔹 மருத்துவம் (SIDDHA MEDICINE) சித்தர் மரபு – அகத்தியர், திருமூலர் போன்றோர் மூலிகை மருத்துவம், ஓகம், மருந்து தயாரிப்பு, நச்சு நீக்கம், மாழை மாற்றம்  🔹 வேளாண்மை திருக்குறள்,சிலப்ப...

இயற்றமிழ்

படம்
இயற்கை யின், அனைத்தின்,  இயலைக் குறித்த தமிழே இயற்றமிழ் ஆகும். இயற்றமிழ் என்றால் இயலின் அத்தனையையும் பற்றிய தமிழ் என்று பொருள். முதலெனப்படுவது இடமும் காலமும் என்பது தொடங்கி அதன் விரிவான நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பனவற்றை விரித்து அவைகளே கோள்கள், உலகம், உலகத்தில் உள்ள உயிரிகள் உள்ளிட்ட அத்தனையும் என்று புரிந்து கொள்வதற்கான தலைப்பே இயற்றமிழ்.

இயற்கை

படம்
இயலின் நீட்சியாக இயல் உடைய அத்தனையையும் குறிக்க தமிழ்முன்னோர் நிறுவிய சொல்லே இயற்கை. இயற்கை என்றால் இயலின் நீட்சி என்று பொருள்.

இயல்

படம்
இயல் என்கிற சொல்லில், இயம் என்கிற கோட்பாடும்.  இயக்கம் என்கிற நடைமுறையும் இருக்கிறது. இயல் என்றால் கோட்பாடும் நடைமுறையும் என்று பொருள்.